News March 20, 2024
நீலகிரி: புலி தாக்கி மீண்டும் பசு மாடு பலி

ஓவேலியில் வன விலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லமலை பகுதியை சேர்ந்தவர் புஷ்ராஜ். இவர் வழக்கம் போல் தனது பசு மாடுகளை நேற்று ( மார்ச் 19) மேய்ச்சலுக்கு விட்டு உள்ளார். அதில் ஒரு மாடு திரும்பி வரவில்லை. இதையடுத்து தேடி சென்ற போது புலியிடம் சிக்கி பலியானது தெரிந்தது. ஏற்கனவே பந்தலூரில் பசுமாட்டை புலி வேட்டையாடி கொன்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 18, 2025
நீலகிரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சார்பில், உதகையில் நாளை(செப்.19) காலை 10 மணி முதல், சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள் தங்களது சுய விவரம், கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 18, 2025
நீலகிரி: நாயை வேட்டையாட காத்திருந்த சிறுத்தை!

கோத்தகிரி: கிளப் சாலை செல்லும் குடியிருப்பு பகுதியில் நேற்று முந்தினம் இரவு சிறுத்தை ஒன்று உலா வந்தது. அப்போது அங்குள்ள வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை கவ்வி வேட்டையாட முயன்றது. அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் மாடியில் நின்றவாரே சிறுத்தையை துரத்தினார். நாயும் காயங்களுடன் உயிர் தப்பியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News September 17, 2025
நீலகிரி: அதிமுக கவுன்சிலர் மகன் தற்கொலை வழக்கில் திருப்பம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் உடற்பயிற்சி நிலையத்தில் அதிக ஊக்க மருந்து எடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட அதிமுக கவுன்சிலர் குருமூர்த்தியின் மகன் ராஜேஷ் கண்ணா தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கை, தூண்டுதல் வழக்காக மாற்றி போலீசார் விசாரிக்கின்றனர். உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் சிவகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.