News December 20, 2025
நீலகிரி: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க
Similar News
News December 25, 2025
FLASH: நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் ஜனவரி 5 தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக செல்ல வேண்டும். அத்தியாவசிய பொருள்கள் ஏற்றி வரும் வாகனங்களை தவிர, அனைத்து கனரக வாகனங்களும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உதகை நகரத்திற்குள் அனுமதி இல்லை. இந்த தகவலை நீலகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
News December 25, 2025
நீலகிரி: நிலம் வாங்க மானியம்: விண்ணபிப்பது எப்படி?

1).நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2).குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3).2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4).100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5).<
6).மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHAREit
News December 25, 2025
சேரங்கோடு பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த மகிழுந்து

சேரங்கோடு மண்டசாமி கோவில் அருகே தேவாலாவில் இருந்து கேரளா நோக்கி சென்ற KL550216 பதிவென் கொண்ட கார், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கணவன் மனைவி 2 குழந்தைகள் உட்பட 4 பேரும் பலத்த காயத்துடன், கேரளா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து சேரம்படி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.


