News February 10, 2025
நீலகிரி பத்திரபதிவு அலுவலர்களுக்கு விடுமுறை இல்லை

தைப்பூசம் தினத்தன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நீலகிரியில் உள்ள ஊட்டி கோத்தகிரி குன்னூர் கூடலூர் ஆகிய இடங்களில் உள்ள பத்திர பதிவு அலுவலகங்கள் வழக்கம் போல் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். விடுமுறை நாள் ஆவண பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
நீலகிரி மக்களே அவசியம் பாருங்க!

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப தங்கும் இடம், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை லிங்கை <
News November 13, 2025
உதகை ஏடிசி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

உதகை ஏடிசி நடைபாதை பகுதியில் உதகமண்டலம் நகராட்சி ஆணையாளர் கணேசன் உத்தரவின் பேரில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கடைகள் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றும் பணி தொடங்கியது. இதில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
News November 13, 2025
நீலகிரியில் சிக்கித் தவிக்கும் சிறுத்தை!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே பந்தலூர் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட வேலி கம்பியில் இன்று ஒரு சிறுத்தை சிக்கியது. இந்நிலையில், சிறுத்தையை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி, அதனை பாதுகாப்பாக மீட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


