News March 18, 2024

நீலகிரி: தேயிலையில் மைட்ஸ் நோய் பாதிப்பு

image

நீலகிரி, தேயிலையில் மைட்ஸ் நோய் வெகுவாக பரவி வருகிறது. இதனால் மகசூல் குறைந்து, விவசாயிகளுக்கு பெருமளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி போஜராஜன் இன்று(மார்ச் 18) கூறுகையில், “வறட்சியால், ‘மைட்ஸ் ‘ நோய் அதிகரித்து உள்ளது. எனவே விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்” என்றார்.

Similar News

News October 31, 2025

நீலகிரி: இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News October 31, 2025

நீலகிரி: சாய்பாபா பெயரில் பெண்ணிடம் மோசடி!

image

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுசி(37) என்பவரை ஏமாற்றிய வழக்கில் ராஜ்குமார்(46) என்பவர் கைது செய்யப்பட்டார். சுசியின் வீட்டை நிதி நிறுவன கிளை அலுவலகமாக போக்கியத்திற்கு எடுப்பதாக கூறி, ரூ.6.24 லட்சம் பெற்றும் பணம் திருப்பி தரவில்லை. புகாரின் பேரில் ஊட்டி ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமாரை கைது செய்தனர். அவர் நிதி நிறுவனம் மட்டுமின்றி சாய்பாபா பெயரில் ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார்.

News October 31, 2025

நீலகிரி: லஞ்சம் பெற்றால் புகார் – எண் வெளியீடு!

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழிப்புணர்வு நம் அனைவரின் பொறுப்பு என்ற தலைப்பில் நடந்தது.எஸ்.ஐ., சக்தி முன்னிலை வகித்து பேசினார் .நீலகிரி மாவட்டத்தில் லஞ்சம் பற்றிய புகார்களை நேரிலோ அல்லது டி.எஸ்.பி., 9498147234, இன்ஸ்பெக்டர் 9498124373 மற்றும் அலுவலக தொலைபேசி எண் 0423-2443962 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

error: Content is protected !!