News September 19, 2025

நீலகிரி: தமிழக அரசு வழங்கும் ரூ.2000 வேண்டுமா?

image

நீலகிரி மக்களே தமிழக அரசின் அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தில் ஆதவரற்ற குழந்தைகளுக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது. தாய், தந்தை பிரிந்து வாழும் குழந்தைகளுக்கு 18வயது வரை வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப அட்டை, ஆதார், வங்கி கணக்கு உள்ளிட்ட நகலுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம், கலெக்டர் ஆபீஸ், குழந்தைகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் பண்ணவும்<<>>. மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News September 19, 2025

நீலகிரியில் 4 நாள் மூடப்படுகிறது

image

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வரும் செப்.23 முதல் 26 வரை 4நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், பூங்காவின் மேம்பாட்டிற்காகவும் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

News September 19, 2025

நீலகிரி:தொடர்கிறது 12பேரை கொன்ற யானையை பிடிக்கும் பணி!

image

கூடலுார் ஓவேலியில், 12 பேரை கொன்ற காட்டு யானையை டிரோன் கேமரா மூலம் காட்டு யானை இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ”யானையை பிடிக்கும் பணியில், 140 பேர் ஈடுபட்டுள்ளனர். மாலை வரை, முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில், மயக்க ஊசி செலுத்த முயன்றும் முடியவில்லை. இதனால், நாளை (இன்று) இப்பணி மீண்டும் தொடரும்,” என்றார்.

News September 19, 2025

நீலகிரியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

image

நீலகிரி மாவட்டம் முதுமலை மசனகுடி ஆச்சக்கரையை சேர்ந்தவர் மேத்தா. 71 வயது ஆன மேத்தா நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் சாலையில் நடந்து சென்ற போது காட்டு யானை தாக்கி பலத்த காயமடைந்துள்ளார். காயமடைந்த வரை உடனடியாக சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். மேல் சிகிச்சைக்காக ஊட்டியில் இருந்து கோவைக்கு எடுத்து செல்லும் வழியில் இன்று அவர் இறந்தார்.

error: Content is protected !!