News October 1, 2025

நீலகிரி: டாஸ்மாக் பார்கள் திறந்திருந்தார் புகாரளியுங்கள்!

image

நீலகிரியில் நாளை காந்தி ஜெயந்தியால், டாஸ்மாக் மதுகடைகள் மற்றும் பார்கள் திறந்திருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால், உடடினயாக புகார் தெரிவிக்கலாம். ஊட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு மற்றும் அமலாக்கம், 0423 2223802; மாவட்ட உதவி ஆணையர் (ஆயம்) 0423 2443693; குன்னுார் எடப்பள்ளி டாஸ்மாக் மாவட்ட மேலாளர், 0423 2234211 ஆகிய எண்களில் தெரியப்படுத்தலாம். இதை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 11, 2025

நீலகிரி: தேனீக்கள் தாக்கி 6 பேர் படுகாயம்

image

நீலகிரி மாவட்டம், குன்னூர் வண்டிச்சோலை அருகே வனத்துறையின் நர்சரியில் நேற்று காலை 11 மணியளவில் தேன் கூடு கலைந்து தேனீக்கள் தாக்கின. அதில் வாட்சர் தவமணி (55) கடுமையாக காயமடைந்தனர். அவரை காப்பாற்ற வந்த வாட்சர் நந்தினி மற்றும் தற்காலிக பணியாளர்கள் உஷா, சுசீலா, ரஞ்சினி, புவனேஸ்வரி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. ஆறு பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

News November 11, 2025

குன்னூர்: தேனி கொட்டியதில் வனத்துறையினர் காயம்

image

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேனீக்கள் கொட்டியதில் வண்டிச்சோலை பாரஸ்ட் நர்சரி வனத்துறையில் பணிபுரியும் ஐந்து பேர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளர்.

News November 10, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி ஆட்சியரின் செய்தி குறிப்பில் திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்கள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவ மாணவியருக்கு 15,000 பரிசு தொகையும் பாராட்டு சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பங்கு பெறுபவர்களுக்கு வரும் 26 ஆம் தேதி அன்று திருக்குறள் முற்றோதல் போட்டி தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்றார்.

error: Content is protected !!