News April 20, 2025
நீலகிரி: சாலை விபத்தில் ஒருவர் பலி!

நீலகிரி, நிலக்கோட்டை, சுல்தாம்பத்தேரி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மாலை கேரள மாநிலம் தலச்சேரியை சேர்ந்த 2 இளைஞர்கள் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த அரசு பேருந்தில், பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும், மற்றவர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து, நிலக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 18, 2025
நீலகிரி: பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள தனியார் ஆங்கில பள்ளிக்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். வெடிகுண்டு தடுப்பு போலீஸ் குழுவினர் மோப்ப நாயுடன் விரைந்து சென்று பள்ளி அலுவலகம், வகுப்பறைகள் உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். பிறகு புரளி என தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 18, 2025
உதகை ஆங்கில பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள தனியார் ஆங்கில பள்ளிக்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். வெடிகுண்டு தடுப்பு போலீஸ் குழுவினர் மோப்ப நாயுடன் விரைந்து சென்று பள்ளி அலுவலகம், வகுப்பறைகள் உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். பிறகு புரளி என தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 17, 2025
நீலகிரி: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா, தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை முன்வைத்து தீர்வு கோரினர்.