News October 30, 2025
நீலகிரி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி?

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News October 30, 2025
நீலகிரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 30, 2025
கோத்தகிரியில் உயிரிழக்கும் அபாயம்

நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கவர்கள் (ம) பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால் கோத்தகிரி பகுதியில் போது இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இவற்றை கால்நடைகள் உண்ணுவதால் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
News October 30, 2025
கோத்தகிரி அருகே மதுவால் நேர்ந்த சோகம்

கோத்தகிரி அருகே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(42). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுப்பழக்கத்தை கைவிட முடியாத மன உளைச்சலில் தனது வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


