News July 29, 2024
நீலகிரி காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

நீலகிரியில் காவல் துறையினர் சார்பில் மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு போதை, போக்குவரத்து, போக்சோ பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (28-ம் தேதி) கீழ்கோத்தகிரியில் போலீஸ் எஸ்.பி.சுந்தரவடிவேல் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். இதில் டி.எஸ்.பி.குமார், இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
Similar News
News August 14, 2025
தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-யின் கீழ், மாநில தகவல் ஆணையர்கள் ஆர்.பிரியகுமார் வி.பி.இளம்பரிதி, .எம்.நடேசன், ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., முன்னிலையில், நேற்று அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
News August 14, 2025
நீலகிரியில் கலெக்டர் எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை நிலையங்கள், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று மூடப்படும் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.அன்றைய தினம் ஏதேனும் கடை திறந்திருந்தால்,மதுவிலக்கு மற்றும் அமலாக்கம்: 0423-2223802 உதவி ஆணையர்: 0423-2443693 டாஸ்மாக் மாவட்ட மேலாளர்: 0423-2234211 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்.
News August 14, 2025
நீலகிரியில் இன்று முகாம்கள் நடைபெறும் இடங்கள்!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம், 6 தாலுகாக்களிலும் நடைபெற்று வருகிறது. இன்று (ஆகஸ்ட் 14) நடைபெறும் முகாம்களின் விவரங்கள்: குன்னூர் நகராட்சி – பாரதியார் மண்டபம், ஊட்டி நகராட்சி – ஸ்ரீனிவாசா மண்டபம், சோலூர் பகுதி – உரட்டி சமுதாயக் கூடம், கெங்கரை பகுதி – கெங்கரை சமுதாயக் கூடம், குந்தா பகுதி – கூர்மையாபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெறுகிறது.