News September 9, 2025
நீலகிரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

ஊட்டி அருகே முட்டிநாடு கிராமத்தை சுற்றி சிவசெந்துார் நகர், செல்விப் நகர், ஈஸ்வர நகர் என, 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிகளிலிருந்து ஊட்டி, குன்னுாருக்கு அரசு, தனியார் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.கிராமத்திற்கு சீராக பஸ் இயக்க கோரி கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News March 2, 2026
உதகை: பொதுத்தேர்வு மையத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு

உதகையிலுள்ள பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பிளஸ்-2 பொதுத்தேர்வினை, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தண்ணீரு இன்று நேரில் ஆய்வு செய்தார். தேர்வுகள் முறையாக நடைபெறுகிறதா என்பதையும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் அவர் கேட்டறிந்தார். மேலும், பறக்கும் படையினரும் தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
News March 2, 2026
நீலகிரி: சொந்த தொழில் தொடங்க SUPER வழி!

நீலகிரி மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <
News March 2, 2026
நீலகிரி: 10-வது முடித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை தர உறுதி நிறுவனத்தில் MTS (Multi Tasking Staff), LDC (Lower Division Clerk), Superintendent (Stores) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <


