News September 27, 2025
நீலகிரி: கர்நாடகாவுக்கு கடத்திய 300கிலோ கேழ்வரகு பறிமுதல்

கூடலூரில் இருந்து கர்நாடகா அரசு பஸ்சில், கர்நாடகாவுக்கு கேழ்வரகு கடத்துவதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது.கூடலுார் வட்ட வழங்கல் அலுவலர் நடேஷன் மற்றும் ஊழியர்கள் நேற்று, மாலை புதிய பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்தனர். அப்போது, கர்நாடக அரசு பஸ்சில் ஏற்றுவதற்காக சில மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்தன. அதனை ஆய்வு செய்து 300 கிலோ கேழ்வரகை பறிமுதல் செய்தனர். இதனை வைத்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Similar News
News February 10, 2026
நீலகிரி: போஸ்ட் ஆபீஸ் வேலை: தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது
7.மேலும் தகவலுக்கு:<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
நீலகிரி: வாக்காளர்கள் கவனத்திற்கு

நீலகிரி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News February 10, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்கவும், அங்கீகாரம் புதுப்பிக்கவும் மாவட்ட ஆட்சியர் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். விருப்பமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலம் பிப்ரவரி 28-க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 5,000 மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ. 8,000 செலுத்த வேண்டும். கூடுதல் பிரிவுகள் தொடங்கவும் இதில் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.


