News May 2, 2024

நீலகிரியில் 38 நிறுவனம் மீது நடவடிக்கை

image

நீலகிரியில் தொழிலாளர்களுக்கு மே தினத்தன்று விடுமுறை அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என குன்னூர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முருகேசன் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில். குன்னூர். ஊட்டி, கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் இயங்கும் 38 நிறுவனங்கள் விதி மீறி செயல்பட்டது தெரியவந்தது. அந்த 38 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 6, 2026

குன்னூர்: அரசு பேருந்தில் மோதி ராணுவ வீரர் படுகாயம்!

image

குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமை சேர்ந்த பிரதீப் பட்டேல் (35) இருசக்கர வாகனத்தில் ஊட்டியிலிருந்து தலைகுந்தா நோக்கி சென்றார். அப்போது முன் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த அரசு பஸ்சுடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் படுகாயமடைந்து ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஊட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 6, 2026

கூடலூர்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

image

கூடலூரில் இருந்து ஊட்டி நோக்கி சென்ற வாகனங்களை தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் சோதனை செய்தனர். நடுவட்டம் பகுதியில் அரசு பஸ்சை நிறுத்தி பயணிகளை பரிசோதித்த போது, பந்தலூர் தாலுகா உப்பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் ஆவணங்கள் இன்றி ரூ.53 ஆயிரம் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த தொகையை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.

News April 6, 2026

நீலகிரி: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 6 தாலுகாக்களில் நேற்று (ஏப்ரல் 5) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அந்தந்த பகுதி போலீசாரின் தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!