News November 7, 2025
நீலகிரியில் 2 பேர் அதிரடி கைது!

நீலகிரி: உதகை பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றிய சானு, பானாசானு என்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். வட மாநிலத்தை சேர்ந்த இவர்கள், பள்ளி – கல்லூரி மாணவர்களை குறிவைத்து அவர்களுக்கு விற்பனை செய்வதற்காக 3 கிலோ கஞ்சா வைத்திருந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மேலும் உள்ள தொடர்புகள் மற்றும் கும்பல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News February 1, 2026
நீலகிரி: சோலார் பம்புசெட் வேண்டுமா?

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <
News February 1, 2026
மஞ்சூரில் சம்பவம் செய்த கரடி!

உதகை மஞ்சூர் பஜார் பகுதியில் நேற்று அதிகாலை உலவி வந்த கரடி, அங்குள்ள அங்கன் வாடி மையத்தின் முன் பக்க கதவை உடைத்து, உள்ளே நுழைந்தது. பின் உள்ளேயிருந்த டிவி,ஃபேன் போன்ற பொருட்களை சேதப்படுத்தி, மற்றொரு கதவையும் உடைத்து கொண்டு சென்றது. எனவே இப்பகுதி பொதுமக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்குமாறு வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
News February 1, 2026
நீலகிரி: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு

நீலகிரி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


