News August 14, 2024

நீலகிரியில் வருவாய் இழப்பு

image

நீலகிரி மாவட்டம் சுற்றுலா வருவாயை நம்பியிருக்கும் மாவட்டமாகும். வயநாடு சம்பவத்திற்கு பிறகு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் கேரளா சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைவாக உள்ளதால் சுற்றுலாவை மட்டுமே நம்பி உள்ள விடுதி உரிமையாளர்கள், வியாபாரிகள், பூங்காக்களில் உள்ள புகைப்படக் கலைஞர்கள் வருவாய் இழந்ததுடன் மாற்றுத் தொழிலை நாடி செல்லும் சூழ்நிலை நிலவுகிறது.

Similar News

News January 27, 2026

நீலகிரி: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா? APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். ( SHARE பண்ணுங்க)

News January 27, 2026

உதகையில் மக்கள் கடும் அவதி

image

உதகையில் நேற்று திடீரென மூடுபனியுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் நிலவிய கடும் குளிரின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. சாரல் மழையுடன் மூடுபனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

News January 27, 2026

கோத்தகிரியில் சோகம்

image

கோத்தகிரி அருகே உள்ள பில்லி கம்பை கிராமத்தை சேர்ந்த தன்ராஜ் (50 சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவர் நேற்று முன்தினம் ஊட்டிக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்த்ததில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தன்ராஜின் தாய் மிச்சியம்மாள் சோகம் தாளாமல் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

error: Content is protected !!