News October 18, 2025
நீலகிரியில் வசமாக சிக்கிய நபர்: போலீஸ் அதிரடி

கூடலூர் அத்திப்பாளி பகுதியை சேர்ந்தவர் அனிபா. நள்ளிரவில் வீட்டுக்குள் சத்தம் கேட்டு அனிபா எழுந்தார். பின்னர் டார்ச் லைட் அடித்து பார்த்த போது, வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் வந்து நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சசமயம் வாலிபர் தப்பி ஓடினார். இது குறித்து அனிபா கூடலூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருட முயன்ற அதே பகுதியை சேர்ந்த ஷெரீப் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News October 18, 2025
நீலகிரி கேஸ் சிலிண்டர் இருக்கா..இது கட்டாயம்!

நீலகிரி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இதனை மறக்காமல் கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க.
News October 18, 2025
நீலகிரி: தீபாவளிக்கு ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரிவோர். தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். அவ்வாறு பயணம் செய்வோர். குறைந்த கட்டணத்தில் பயணிக்க இங்கு<
News October 18, 2025
நீலகிரி: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!