News February 4, 2026
நீலகிரியில் ரூ.12 கோடி அபராதம்: அதிர்ச்சி தகவல்!

நீலகிரியில் கடந்த ஆண்டு 209 சாலை வழக்குகள் பதிவாகியுள்ளன.1,67,337 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 1288 மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும்,500 அதிவேகமாக வாகனங்களை இயக்கியதற்காகவும்,1331 அபாயகரமானதாக வாகனம் ஓட்டியதற்காக பதிவு செய்யப்பட்டவை. அதன்படி 12,12,45,000 அபராத தொகை மக்களிடம் வசூலிக்கப்பட்டதாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தெரிவித்துள்ளார்
Similar News
News February 4, 2026
நீலகிரி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

நீலகிரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<
News February 4, 2026
மோட்டார் சைக்கிள் மோதி கட்டுமானத் தொழிலாளி சாவு

சிறுமுகை பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளியான காளிசாமி( வயது 42) என்பவர் நேற்று மாலை 5 மணிக்கு அரவேனு தவிட்டுமேடு பகுதியில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்து சாலையோரம் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஆகாஷ்(19) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
News February 4, 2026
நீலகிரி: பெரும் அச்சத்தில் பொதுமக்கள்!

நீலகிரி: தேவர்சோலை, பாடந்துறை வேர்க்கடவு பகுதியில், பழங்குடியின மக்கள் வளர்க்கும் கால்நடைகளை மர்ம விலங்கு தொடர்ந்து தாக்கி வருகிறது. நேற்று ஒரு ஆடு கொல்லப்பட்ட நிலையில், 2 நாட்களுக்கு முன்பு சுரேஷ் என்பவரின் ஆடும் பலியானது. வனவிலங்கின் தொடர் அட்டகாசத்தால் அச்சமடைந்துள்ள மக்கள், வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


