News August 12, 2024
நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் நாளை 13-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதேபோல், நாளை மறுநாள் 14-ம் தேதி, நீலகிரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News January 31, 2026
நீலகிரி: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
வேலை தேடும் யாருக்காவது நிச்சயம் இது உதவும் இந்த தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!
News January 31, 2026
கூடலூர் மாணவன் உலக சாதனை

நீலகிரி மாவட்டம் கூடலூர், மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் சுதன், தமிழகத்தின் 38 மாவட்டங்களின் பெயர்களையும் வெறும் 15 வினாடிகளில் பிழையின்றி ஒப்பித்து International Book of Records-ல் இடம்பிடித்துள்ளார். இந்த அசாத்திய வேகத்திற்காக அந்த மாணவனுக்குச் சர்வதேச அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
News January 31, 2026
பந்தலூர் அருகே புலி தாக்கி பசு பலி: நிவாரணம் வழங்கல்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட நெலாகோட்டை பகுதியில் விஜய் கிருஷ்ணன் என்பவரது பசுவைப் புலி அடித்துக் கொன்றது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், வனச்சரகர் ரவி தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவருக்கு ₹30,000 நிவாரணத் தொகை வழங்கினர். தற்போது வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


