News September 10, 2025

நீலகிரியில் பெரும் விபத்து தவிர்ப்பு

image

நீலகிரி, யானை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, கூடலுார் – ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்அப்போது, ஊட்டியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் சுற்றுலா வாகனம் திடீரென பிரேக் பிடிக்காமல், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதியில் நுழைந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் அங்கு இருந்தவர்கள் சப்தமிட்டு அனைவரையும் அப்புறப்படுத்தி பாதுகாத்தனர்.

Similar News

News September 11, 2025

நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்!

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (10.09.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News September 11, 2025

உதகையில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்

image

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா தலைமையில் வாராந்திர குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர். மேலும் இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News September 11, 2025

நீலகிரி: கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பொறுப்பேற்பு

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கமர்சியல் சாலையில் அமைந்துள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்து வந்த துணைப் பதிவாளர் மரு.தே.சித்ரா இணை பதிவாளராக இன்று நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!