News June 13, 2024
நீலகிரியில் பதவி உயர்வு பெற்ற 26 பேருக்கு ஆணை எப்போது?

கடந்த 1999ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்து பணியாற்றிவந்து தற்போது ஏட்டுகளாக உள்ளவர்களுக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி 25 வருடம் நிறைவு பெற்றது. இதை அடுத்து அவர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் சப் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் உத்தரவு ஆணை வழங்கப்பட்டது. நீலகிரியில் பதவி உயர்வு பெற்ற 26 பேருக்கு இதுவரை ஆணை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
Similar News
News January 26, 2026
கோத்தகிரி அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

கோத்தகிரியை சேர்ந்த சமூக சேவகரான தொழிலதிபர் சிவகுமார்(வயது 48). இந்நிலையில் நேற்று மேட்டுப்பாளையம் நாலு ரோடு பகுதியில் நடைபெற்ற, கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்று விட்டு, தனது காரில் திரும்ப செல்லும் போது, இயற்கை உபாதையை கழிக்க காரை நிறுத்தி இறங்கியுள்ளார். அப்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 26, 2026
உதகையில் அதிரடி கைது!

ஊட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் ஊட்டி பெர்ன்ஹில் பேலஸ் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 35 மூட்டைகளில் 1.5டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிந்தது. பின்னர் அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரை கைது செய்தனர்.
News January 25, 2026
நீலகிரி: Certificate இல்லையா? உடனே இத பண்ணுங்க!

நீலகிரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. <


