News April 9, 2025
நீலகிரியில் தூக்கத்தை தொலைத்த கிராம மக்கள்

தேவர்சோலை பேரூராட்சி, கம்பாடி , கோளூர், பாடந்துறை பகுதிகளில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில், ‘சக்கச்சி வயல்’ என்ற பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது, இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உறக்கத்தைத் தொலைத்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
Similar News
News May 8, 2025
நீலகிரி: 20 பள்ளிகள் 100% தேர்ச்சி

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் நீலகிரி 85 பள்ளிகள் உள்ளது. அதில் 5 அரசு பள்ளிகள் உட்பட 20 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 2,200 பேரில் 1,975 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை WAY2NEWSல் தொடர்ந்து பாருங்கள். (ஷேர் பண்ணுங்க)
News May 7, 2025
குன்னூரில் – மேட்டுப்பாளையம் சாலையில் விபத்து

குன்னூரில் – மேட்டுப்பாளையம் செல்லும் மலை பாதையில் பர்லியார் அருகே இன்று வேகமாக சென்ற கார் இன்னொரு காரின் மீது மோதி சிறு விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . இதையடுத்து போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர்.
News May 7, 2025
நீலகிரி: காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 9498111140, 0423-2223839
நீலகிரி துணை காவல் கண்காணிப்பாளர் – 9498178146, 0423-2223840
உதகை டிஎஸ்பி – 9840579660, 04232223811
தேவாலா டிஎஸ்பி – 9498176831 04262-260324
உதகை ஊரகம் – 04232223829
குன்னூர் டிஎஸ்பி – 8248442155, 04232221834
கூடலூர் – 9486802100 04262261227. இந்த பயனுள்ள தகவலை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!