News February 7, 2026
நீலகிரியில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)
Similar News
News February 13, 2026
நீலகிரி: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா?

நீலகிரி மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.
News February 13, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்

நீலகிரியில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கணினி பயிற்சி முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், ‘பி’ பிளாக், கூடுதல் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பிப்.16ம் தேதி கடைசி ஆகும்.
News February 13, 2026
கோத்தகிரியில் கூண்டோடு கைது

தொழிலாளர் சட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர்களுக்கு விரோதமாக 4 புதிய சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறையை தனியார் மயமாக்குவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோத்தகிரியில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 30 பெண்கள் உள்பட 90 பேரை போலீசார் கைது செய்தனர்.


