News September 17, 2025

நீலகிரிக்கு அரஞ்சு அலார்ட் மக்களே உஷார்!

image

தென்னிந்தியப் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி உட்பட 19 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News September 17, 2025

நீலகிரியில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

image

மாதந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிங்கர் போஸ்டில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் ( 19.09.2025) நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

உதகை மாரியம்மன் கோயிலில் மோடி பெயரில் சிறப்பு பூஜை

image

உதகை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் முன்னிட்டு நகர பாஜக சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் உதகை நகர  தலைவர் ரித்து கார்திக், மாவட்ட முன்னாள் தலைவர் மோகன்ராஜ் , மாவட்ட பொருளாதார அணி தலைவர் நித்தின் சந்திர சேகர், மாவட்ட துணை தலைவர் அருண், நகர துணை தலைவர்கள்  சுதாகர் மஞ்சுநாத், பட்டாபிராமன்  மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News September 17, 2025

நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள அறிவிப்பு: குன்னூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும், கூடலூர் பழங்குடியினர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திலும் கடந்த 12ஆம் தேதி முதல் நடைபெற்ற வருகிறது. பயிற்சி காலம் ஓராண்டு முதல் 2ஆண்டு வரை, கல்வித் தகுதி 8 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, வயது 18 முதல் 40 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!