News August 7, 2024
நீரில் மூழ்கி மூன்று குழந்தைகள் உயிரிழப்பு

கோனேரிகுப்பம் கிராமத்தில் இன்று நாவல் பழம் பறிக்க அப்பகுதியிலுள்ள ஓடையை கடந்து செல்ல முயன்ற 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரின் மகன் சஞ்சய் மற்றும் மாரிமுத்து என்பவரின் மகள்கள்
பிரியதர்ஷினி, சுபஸ்ரீ ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒலக்கூர் போலிசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
நெடுஞ்சாலைத்துறை தலைவரை சந்தித்த விழுப்புரம் எம்பி

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இன்று(டிச.11) டெல்லியில் நெடுஞ்சாலைகள் துறை தலைவர் சந்தோஷ்குமார் யாதவ் அவர்களை சந்தித்து விழுப்புரம் மாவட்டத்தில் 5 இடங்களில் சுரங்கப் பாதைகள் அமைத்தல் மற்றும் பல்வேறு பணிகள் குறித்த கோரிக்கைக் கடிதத்தை வழங்கினார். உடன் விசிக நிறுவனர் தொல்.திருமாவளவன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா பங்கேற்றனர்.
News December 11, 2025
மருத்துவ சேவை புரிந்த மருத்துவர்களை பாராட்டு

(டிச.11) விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக மருத்துவ சேவை புரிந்த மருத்துவர்களை பாராட்டி ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் மருத்துவர்களுக்கு கேடயத்தினை வழங்கினார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன் இந்த நிகழ்வில் இருந்தனர்.
News December 11, 2025
விழுப்புரம்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5.முதியோருக்கான அவசர உதவி -1253. 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க.


