News May 17, 2024

நீரில் மூழ்கிய கல்படை ஆற்றின் தரைப்பாலம்

image

கல்வராயன்மலை அடிவாரத்தில் கல்படை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலத்தை கடந்து தான் மல்லிகைபாடி , பரங்கிநத்தம் உள்ளிட்ட கிராம மக்கள் கச்சிராயப்பாளையம் செல்ல முடியும். இந்த நிலையில் திடீரென பெய்த கோடை மழை காரணமாக இன்று அதிகாலை கல்படை தரைபாலம் நீரில் மூழ்கியதால் இரண்டு கிராம மக்களும் அத்தியாவசிய தேவைகளுக்கு ஆற்றை கடந்து செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர்

Similar News

News July 8, 2025

எந்த வயத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் 2/2

image

குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் அந்த பெண் குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் 2வது பெண் குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, குடும்ப புகைப்படம் ஆகிய சான்றுகளுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் உடனடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்குல் 04146-222288 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News July 8, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 1/1

image

கள்ளக்குறிச்சியில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அப்பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டு குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்புத் தொகை சேமித்து வைக்கப்படும். <<16987300>>தொடர்ச்சி<<>>

News July 8, 2025

தகவல் கையேடுகளை வழங்கும் பணிகள் தொடக்கம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு திட்டமான, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் (07.07.2025) திங்கள் கிழமை கள்ளக்குறிச்சி நகராட்சி 20வது வார்டு பகுதியில் தொடங்கி வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!