News December 8, 2025
நீதி வென்றதாக நடிகர் திலீப் கண்ணீர்

பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி வென்றுள்ளதாக <<18502283>>வழக்கில் இருந்து விடுதலை<<>> செய்யப்பட்ட நடிகர் திலீப் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். எர்ணாகுளத்தில் பேசிய அவர், பொய்யான வழக்கால் சினிமாவில் தனது புகழ், நற்பெயரை சீர்குலைக்க நினைத்தவர்களின் எண்ணம் பொய்யாகிவிட்டது என்றார். மேலும், இந்த வழக்கிற்காக கடந்த 9 ஆண்டுகளாக தனக்கு துணை நின்ற சினிமா, சட்ட நிபுணர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
Similar News
News March 30, 2026
தமிழக அரசுக்கு எதிராக போராடினோம்: பெ.சண்முகம்

ஊழலை ஒரு அளவீடாக கொண்டால், யாருடனுமே கூட்டணி சேர முடியாது என CPM-ன் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். அரசுத் துறைகளில் அரங்கேறிய ஊழலுக்கு எதிராக CPM போராட்டம் நடத்தியிருக்கிறது என்றும், கூட்டணியில் இருப்பதாலேயே அவர்கள்(திமுக) செய்யும் ஊழலுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது எனவும் கூறினார். மேலும், திமுக அரசுக்கு எதிராக CPM போராடிய விஷயங்களை வைத்து பல புத்தகங்களை போடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
News March 30, 2026
இந்தியாவை நோக்கி வரும் 94,000 மெட்ரிக் டன் LPG

பெட்ரோல் பங்க்குகளில் போதுமான அளவு பெட்ரோல், டீசல் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 94,000 மெட்ரிக் டன் LPG உடன் 2 கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், மார்ச்சில் 2.9 லட்சம் கேஸ் இணைப்புகள் வீடு & வணிக பயன்பாடு உள்ளிட்டவைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
News March 30, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: சொல்வன்மை
▶குறள் எண்: 648
▶குறள்: விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
▶பொருள்: வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்.


