News April 19, 2025
நீதியை நிலைநாட்டும் கொங்கலம்மன்!

கொங்கு மண்டலத்துக்கே காவல் தெய்வமாகத் திகழ்பவள் கொங்கலம்மன். ஈரோடு, மணிக்கூண்டு பகுதிக்கு அருகில் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது என்பதற்கு ஆதாரமாக பல கல்வெட்டுகளும் உள்ளன. இங்கு சீட்டு எழுதியும், பூ போட்டும் அருள்வாக்கு கேட்கும் வழக்கம் நிலவி வருகிறது. இங்கு கொங்கலம்மனை வழிபட்டால், எந்த ஒரு பிரச்னைக்கும் சரியான நீதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE IT!
Similar News
News August 8, 2025
ஈரோடு அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை

பவானிசாகர் காவலர் குடியிருப்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதி சேர்ந்த காவலர் சதீஷ்குமார் 35 என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இவருடைய மனைவி கீதா ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக உள்ளார், போலீஸ் விசாரணையில் தலைவலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.
News August 8, 2025
ஈரோடு: ரூ.70,000 பணம், தங்கம் தந்து இலவச திருமணம்!

ஈரோடு, வைரபாளையம், காவேரிகரையில், இந்து அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம். SHARE IT
News August 8, 2025
ஈரோடு: மின் கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஏடி காலனி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டில், இன்று காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலுமாக தீயில் எரிந்து சேதம் அடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.