News September 10, 2024
நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராவேன்: சபாநாகயகர் அப்பாவு

அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 13ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று நேற்று(செப்.10) நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்பாவு, “நான் கண்டிப்பாக 13ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவேன்” என கூறினார்
Similar News
News November 16, 2025
நெல்லை மக்களே கவனமாக இருங்கள்! எச்சரிக்கை…

நாளை (நவ. 17) திங்கள்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டத்திற்கு அதிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. இதனை அடுத்து மாவட்டத்தில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தாழ்வான பகுதிகள் நீர் நிலைகளில் அருகில் வசிக்கும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News November 16, 2025
பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு

நெல்லை அரசு அருங்காட்சியகமும் தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையும் இணைந்து குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் 7548810067 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வருகின்ற 21ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுமென இன்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News November 16, 2025
39969 பேரின் எஸ்ஐஆர் விவரம் பதிவேற்றம் – கலெக்டர் தகவல்

நெல்லையில் 1490 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு
வீடாகச் சென்று எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்களை வழங்குகின்றனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,18,325ல் 13,36,667 பேருக்கு (94.2%) படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொபைல் மூலம் நிரப்பிய படிவங்களை பெற்று ஆப்பில் பதிவேற்றம் செய்கிறார்கள். இதுவரை 39,969 பேரின் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என கலெக்டர் சுகுமார் இன்று அறிவித்துள்ளார்.


