News June 8, 2024

நீதிமன்றத்திற்கு டிமிக்கி கொடுத்த இருவர் கைது

image

அணைக்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் எட்வின் ராஜா( 35), வேலு (61). இவர்கள் இருவரையும் திருட்டு வழக்கில் திசையன்விளை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட இவர்கள் நீதிமன்ற தொடர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இரண்டு மாதமாக தலைமறைவாக இருந்த அவர்களை திசையன்விளை போலீசார் இன்று (ஜூன் 8 ) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

Similar News

News November 12, 2025

நெல்லை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

image

நெல்லை மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <>கிளிக்<<>> செய்து Fill Enumeration Form -ஐ தேர்ந்தெடுத்து மொபைல் எண் (அ) வாக்காளர் எண் மூலம் நுழைந்து SIR படிவத்தை பூர்த்தி செய்து உங்க பெயரை வாக்காளர் பட்டியலில் சேருங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 12, 2025

நெல்லை: மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

image

முக்கூடல் காந்தி தெருவை சேர்ந்த நிராஜ் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு மாடியில் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். இந்நிலையில் அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன் கிடந்துள்ளார். பாப்பாக்குடி போலீசார் நிராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News November 12, 2025

நெல்லை ரயில்கள் 3 நாட்களுக்கு ரத்து

image

நெல்லை ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்கும் பணிக்காக திருச்செந்தூரில் இருந்து காலை 10.10 மணிக்கு நெல்லைக்கு புறப்படும் பயணிகள் ரயிலானது வரும் 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவத்துள்ளது. மேலும், செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் ரயில் சேரன்மகாதேவி வரை மட்டுமே மேற்கண்ட 3 நாட்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!