News August 2, 2024

நீட் முறைகேடு சமுதாயத்தை பாதிக்கக்கூடியது – உயர்நீதிமன்றம்

image

2019 இல் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் 4 மாதத்தில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை சிபிசிஐடி போலீசாருக்கு இன்று ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், நீட் முறைகேடு என்பது சமுதாயத்தை பாதிக்கக்கூடியது. இதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

Similar News

News November 11, 2025

மதுரை மாவட்டம் – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (10.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News November 10, 2025

வாடிப்பட்டி அருகே மகள், தந்தை அடுத்தடுத்து தற்கொலை

image

வாடிப்பட்டி ராமநாயக்கன்பட்டி சேர்ந்த சரவணபாண்டி 42. இவரது மகள் பாண்டி செல்வி கல்லூரியில் படித்து வந்த நிலையில் தீராத வயிற்று வலியின் காரணமாக கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இழப்பை தாங்க முடியாமல் பாண்டிச் செல்வியின் தந்தை சரவண பாண்டி மனம் வெறுத்து நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 10, 2025

மதுரை: நவ.15 காப்பீடு செய்ய கடைசி வாய்ப்பு

image

மதுரை மேலூர் மேலாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் கூறியிருப்பதாவது: 2025-26 ரவி சிறப்பு பருவத்தில் பிரதம மந்திரி காப்பீடு திட்டம் செயல்படுத்தபட உள்ளது. நவ.15 காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் என்பதால் திட்டத்தில் விவசாயிகள் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.540 செலுத்தினால் இயற்கை இடர்பாடு ஏற்பட்டு பாதிக்கும் பட்சத்தில் ரூ.6,000 வழங்கப்படும். பொது சேவை மையத்தில் செலுத்தி காப்பீடு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!