News June 22, 2024
நீட் தேர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை கண்டித்து நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூன் 22) மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார், ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.கிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News July 9, 2025
கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தீயணைப்புத்துறை எல்கைக்கு உட்பட்ட வடக்கன்குளம் சிஎம்எஸ் சிறுவர் இல்லத்தில் பின்புறம் உள்ள கிணற்றில் நேற்று பள்ளி மாணவன் சேர்மதுரை என்பவர் விழுந்துள்ளர். தீயணைப்புத்துறை அங்கு சென்றபோது சிறுவன் கிணற்றில் மூழ்கிய நிலையில் இருந்தார். சிறுவனை இறந்த நிலையில் மீட்டு காவல்துறை வசம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News July 8, 2025
வீரவநல்லூரில் இளம்பெண் வெட்டிக்கொலை

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே இளம்பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கொலை தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தகாத உறவு காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
News July 8, 2025
நெல்லை மக்களின் மனதில் நீங்காத காந்திமதி

நெல்லையில் இன்று தேரோட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியில் திளைத்த போதிலும், அவர்களின் மனதில் நெருடலாக இருந்த பெயர் “காந்திமதி”. நெல்லை மக்கள் முதன்முறையாக காந்திமதி யானை இல்லாமல் இந்த தேரோட்டத்தினை நிகழ்த்தியுள்ளனர். நெல்லை மக்களின் நினைவில் இன்றும் காந்திமதி யானை உயிர்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது. *ஷேர்