News February 10, 2025
நீடாமங்கலம் காவலர் தற்கொலை முயற்சி

நீடாமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் குமார் (30) கடந்த 7ஆம் தேதி இரவு சிறிய கத்தியால் தனது இடது கையில் 7 இடங்களில் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். தற்போது அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கெனவே திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவலர் கடந்த மாதம் தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 16, 2025
மன்னார்குடியில் திருவிழா நிறைவு

மன்னார்குடி உப்புக்கார தெருவில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தினந்தோறும் இரவு சுவாமி வீதி உலா நடைபெற்ற நிலையில், விழாவின் நிறைவாக நேற்று இரவு யானை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்த அம்மனை பக்தர்கள் ஏரளாமானோர் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
News September 16, 2025
திருவாரூர்: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை

இந்திய ரயில்வேயில் வேலை பார்க்க ஆசை இருக்கா? அப்போ இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்!
⏩நிறுவனம்: இந்திய ரயில்வே
⏩பணி: Section Controller
⏩காலியிடங்கள்: 368
⏩சம்பளம்: ரூ.35,400
⏩வயது வரம்பு: 20 – 33
⏩கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
⏩ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
⏩கடைசி தேதி: 14.10.2025
⏩ இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 16, 2025
திருவாரூர்: கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள்<