News August 12, 2024
நீடாமங்கலத்தில் அமைச்சர் ஆய்வு

நீடாமங்கலம் அருகே உள்ள விபி கட்டளை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அதற்கு நிதியினை ஒதுக்கி, அக்கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தினை, தமிழக தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News March 6, 2026
திருவாரூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

திருவாரூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 6, 2026
திருவாரூர்: மகன் கழுத்தை அறுத்து கொன்ற தந்தை!

பேரளம் அருகே உள்ள கடகம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (26). இவர் சம்பவத்தன்று கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் சடலமாக இருந்துள்ளார். இது குறித்து அவரது தந்தை மனோகரன் (54) பேரளம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில், மனோகரனே தனது மகன் அய்யப்பனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, நாடகமாடியது தெரியவந்தது. இதனை அடுத்து தற்போது மனோகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
News March 6, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்.5) இரவு 10 மணி முதல் (மார்ச்.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


