News March 4, 2025
நில அளவை; இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்!

சேலத்தில் உள்ள நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்துக்கலாம்.நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி (அ)அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும்.நில அளவை செய்யப்பட்ட பின்னர், நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை/வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு https://eservices.tn.gov.in/ இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் அறிவிப்பு
Similar News
News March 4, 2025
சேலம் விமான பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

வரும் மார்ச் 31- ஆம் தேதி சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, கொச்சின் ஆகிய நகரங்களுக்கு இருமார்க்கத்திலும் தினசரி விமான சேவையை வழங்கவுள்ளதாக அலையன்ஸ் ஏர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://allianceair.in/book என்ற இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2025
சேலம் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெர்சலை கட்டுப்படுத்தும் வகையில் சேலத்திலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்பட உள்ளது என்றும் அதன் பிறகு அங்கிருந்து தாம்பரம் எழும்பூருக்கு வேறு பஸ்களில் பயணம் செய்யலாம் என சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்ட அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். இதில் சாதாரண பேருந்துகள் மற்றும் குளிர்சாதன பேருந்துகள் அடங்கும்.
News March 4, 2025
சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு

விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை – உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி 31.03.2025 ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது- சேலம் மாவட்ட ஆட்சியர்