News April 26, 2024

நிலைக்கு வந்த மாரியம்மன் கோவில் தேர்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. நேற்று மாலை 3:45 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் நேற்று இரவு 9 :30 மணி அளவில் கோவில் பகுதியை அடைந்தது .இந்த வருடம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடியதால் 5 மணி நேரம் கழித்து தேர் நிலையை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Similar News

News April 6, 2026

திருப்பூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (எ.கா. A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News April 6, 2026

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி!

image

திருப்பூர் 2-வது ரயில்வே கேட் அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 6, 2026

திருப்பூர்: கோடிக்கணக்கில் சிக்கிய பணம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் தலா 9 குழுக்கள் வீதம் மொத்தம் 72 பறக்கும் படைகளும், 72 நிலை கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. மார்ச் 15 முதல் நேற்று காலை வரை நடைபெற்ற சோதனையில், ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.8,59,74,187 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.1,62,67,377 மதிப்பிலான பரிசுப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!