News April 17, 2025

நிலத்தகராறு கொலையில் ஆயுள் தண்டனை

image

கயத்தாறு அருகே உள்ள இலந்தை குளத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரை கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த காளி பாண்டியன் என்பவர் நிலத்தகராறு காரணமாக வெட்டிக் கொலை செய்தார். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (ஏப்.16) காளி பாண்டியனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Similar News

News April 19, 2025

மதுபாட்டில் தகராறில் பெண் அடித்துக் கொலை

image

தூத்துக்குடி அருகே பண்டாரவிளையை சேர்ந்தவர் ஜெபாவைலட்(28). இவருக்கும், குருவுமேடு பகுதியைச் சேர்ந்த மாரிக்கனி(25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2 பேரும் ஏப்.16 அன்று மாரிக்கனி வீட்டில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் ஜெபாவைலட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்த நிலையில் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.

News April 19, 2025

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று உங்கள் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தாலோ அல்லது வாட்ஸ்அப் மூலமாக வரும் இணைப்புகளை கிளிக் செய்து, பாஸ்வேர்டு, பின் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சைபர் புகார்களுக்கு அழையுங்கள் (1930)

News April 19, 2025

தூத்துக்குடி மாவட்டம் இரவு நேர ரோந்து விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (ஏப்18) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே, பொதுமக்கள் அவசர காலத்தில் குறிப்பிட்டுள்ள போலீசாரின் எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

error: Content is protected !!