News April 6, 2025

நிற்காமல் சென்ற ரயில்: விசாரணைக்கு உத்தரவு

image

மயிலாடுதுறை-திருச்சி விரைவு ரயில் நேற்று காலை 8:50 மணிக்கு பாபநாசம் ரயில் நிலையத்தித்திற்கு வந்தது. இந்நிலையில் நடைமேடையில் நிற்காமல் ரயில் 200 மீட்டர் தூரம் தள்ளி நின்றது. இதனால் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். பின்னர் பின்னோக்கி எடுத்து வரப்பட்டு பயணிகளை ஏற்றிச் சென்றது. இதுகுறித்து தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் துறைரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News August 10, 2025

தஞ்சை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! மிஸ் பண்ணாதீங்க!

image

பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) யில் 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ₹15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News August 10, 2025

அடிப்படை வசதிகள் செய்து தர அறிவுறுத்தல்

image

பூம்புகார் வன்னியர் சங்க மகளிர் மாநாடு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இரட்டை அடுக்கு தடுப்புகள் அமைத்தல்,மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளது.

News August 10, 2025

மகளிர் மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட்ட டாக்டர் ராமதாஸ்

image

மயிலாடுதுறை, சீர்காழி அருகே பூம்புகாரில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மகளிர் மாநாடு இன்று மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்காக பூம்புகாரில் மிகப்பெரிய பந்தல் , பார்வையாளர்கள் அமர இருக்கைகள், சுகாதார வசதிகள் போன்றவற்றின் இறுதிக்கட்ட பணிகள் நேற்று இரவு நிறைவடைந்த நிலையில் பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் நேற்று இரவு பூம்புகார் வருகை தந்து ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

error: Content is protected !!