News September 11, 2024

நியோமேக்ஸ் – விசாரணையை துரிதப்படுத்த ஐகோர்ட் உத்தரவு

image

மதுரையைச் சேர்ந்த நிதி நிறுவனமான நியோமேக்ஸ், அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ. 5000 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடி செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று(செப்.11) இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ” நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் ” என்று உத்தரவிட்டனர்.

Similar News

News August 24, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (ஆக.24) இரவு 10 மணி முதல் நாளை காலை 06 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாருக்கேனும் அவர்களின் உதவி தேவைப்பட்டால், அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர உதவிக்கு 100 தொடர்பு கொள்ளலாம்.

News August 24, 2025

மதுரை: அடிப்படை பிரச்னைக்கு உடனே தீர்வு

image

மதுரை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்கும்.இந்த தகவலை Share பண்ணுங்க.!

News August 24, 2025

சோழவந்தான் தொகுதிக்கு நாதக வேட்பாளர் அறிவிப்பு

image

வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாகலட்சுமி திருமாறன் என்பவரை வேட்பாளராக அறிவித்திருக்கிறார். அதற்கு வேட்பாளர் சார்பாக நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பதுடன் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர்.

error: Content is protected !!