News April 1, 2025

நினைத்தது நடக்குனுமா! இங்கு போங்க

image

திருப்பூர், ஊத்துக்குளி சாலையில் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாம். இங்கு பஞ்ச பூதங்களையும் குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோயிலில் உள்ளன. கலியுகத்தில் தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்ட சுக்ரீஸ்வரரை, நாம் வணங்கினால் நினைத்து நடக்குமாம்.

Similar News

News April 2, 2025

திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில்!

image

திருப்பூர் அவிநாசியில், சுமார் 2000 ஆண்டுகள் பழமையான லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சக்திவாய்ந்த அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், நவகிரக தோஷங்கள் நீங்குமாம். பிரதோஷம், அமாவாசை தினங்களில் இங்கு சென்று வழிபாடு செய்தால், திருமணத்தடை நீங்குவதோடு, குடும்ப ஒற்றுமை அதிகரித்து, பிரிந்த தம்பதி ஒன்று சேர்வார்களாம். திருமணத்தடை, குடும்ப பிரச்சனை உள்ளவர்களுக்கு இதை Share பண்ணுங்க.

News April 2, 2025

அங்கன்வாடி பணிக்கு பயிற்சி

image

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை இங்கு <>கிளிக் செய்து<<>> அறியலாம். இதை பிறர் பயன்பெற SHARE செய்யுங்கள்.

News April 2, 2025

BREAKING: தங்கையை கொன்ற அண்ணன் கைது

image

திருப்பூர், பருவாய் கிராமத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதில் சந்தேகம் ஏற்பட்டதால் நேற்று புதைக்கப்பட்ட அவரின் உடலை தோண்டி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனை மற்றும் போலீசாரின் விசாரணையில் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணை காதலித்ததால் வித்யாவின் சகோதரர் சரவணன் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!