News August 13, 2024
நிதி மோசடி வழக்கில் தேவநாதன் கைது

சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் என்னும் இடத்தில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக முதலீடு பெற்று வாடிக்கையாளரை ஏமாற்றியதாக புகார் எழுந்தது.
Similar News
News March 4, 2026
புதுகை: விருது பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

புதுகை மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு விருது வழங்க கலெக்டர் தலைமையில் தேர்வு குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மி உள்ளிட்ட கலைஞரிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. 18-65 வயது உடையோர் மார்ச் 30க்குள் உதவி இயக்குனர் கலை பண்பாட்டு மையம் ஸ்ரீரங்கம் திருச்சி-6 விண்ணப்பிக்க கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
News March 3, 2026
புதுக்கோட்டை: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

புதுக்கோட்டை மக்களே, <
News March 3, 2026
BREAKING புதுகை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை திருவப்பூரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழா வரும் மார்ச்.9-ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. அதனை ஈடுசெய்யும் வகையில் மார்ச்.14-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க.


