News March 4, 2026
நிதிஷ்குமார் CM பதவியில் இருந்து விலகலா?

பிஹார் CM பொறுப்பில் இருந்து நிதிஷ்குமார் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை அவர் ராஜ்யசபா MP தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. நிதிஷ்க்கு மத்தியில் முக்கிய அமைச்சரவை ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது மகன் நிஷாந்த் குமாருக்கு DCM பதவி வழங்கப்படலாம் எனவும் தெரிகிறது. பிஹார் அரசியலில் ஏற்பட உள்ள இந்த அதிரடி மாற்றங்கள் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Similar News
News April 6, 2026
EPS-ஐ பந்தயத்துக்கு அழைத்த துரைமுருகன்

தனது உடல்நலன், வயது மூப்பு குறித்த EPS-ன் பேச்சுக்கு துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். வேலூர் பிரசாரத்தில் பேசிய EPS, எழுந்து நடக்கவே முடியாத துரைமுருகனால் எப்படி தொகுதி முழுக்க சென்று மக்களின் குறைகளை கேட்க முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள துரைமுருகன், வேண்டுமென்றால் EPS-ஐ என்னுடன் நடைபயிற்சி போட்டிக்கு வரச் சொல்லுங்கள் பார்க்கலாம் என கூறி அழைப்பு விடுத்துள்ளார்.
News April 6, 2026
தமிழகத்தில் 9 பேருக்கு தூக்கு தண்டனை.. பரபரப்பு தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. முதல் குற்றவாளியான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையுடன் சேர்த்து ₹15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கின் விசாரணை, 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி முத்துக்குமரன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
News April 6, 2026
சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 9 பேருக்குமான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. தந்தை, மகனை நிர்வாணப்படுத்தி அடித்தது கொடூர செயல் என தெரிவித்த மதுரை கோர்ட், சட்டத்தை காக்க வேண்டிய போலீசாரே குற்றம் செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், மத்திய அரசு அளித்த அறிக்கையில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.


