News June 17, 2024
நிதியுதவி பெற கிறிஸ்துவ தேவாலயங்கள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் நிதியுதவி பெற தேவாலயங்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். அதில், தேவாலயங்களை பழுது பாா்த்தல், கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதுக்கேற்ப மானியத் தொகையை தமிழக அரசு உயா்த்தியுள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு,விண்ணப்பிக்கும் தேவாலயங்கள் ஆய்வு செய்யப்பட்டு நிதியுதவி 2 தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார்.
Similar News
News September 9, 2025
திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,9) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 9, 2025
திருவாரூர்: ஆசிரியர் வேலை – நாளையே கடைசி நாள்

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க நேற்று (செப்.8) இறுதி நாளாக இருந்த நிலையில், நாளை (செப்.10) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனே https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..
News September 9, 2025
உழவர் நலத்துறையின் சார்பில் சுற்றுலா

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் அங்கக வேளாண்மை குறித்து அறியும் வகையில் ஒரு நாள் கல்விச் சுற்றுலாவினை இன்று (செப்.09) மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.