News March 19, 2025
நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500 வீதம் வழங்கப்படும்

சென்னை பெருநகர மாநகராட்சி இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியருக்கு பயணப்படி மற்றும் உணவுப்படி வழங்குதல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500 வீதம் வழங்கப்படும் என புதிய அறிவிப்பு.
Similar News
News September 19, 2025
சென்னை: மழையை எதிர்கொள்ள தயார்- கே.என்.நேரு

மயிலாப்பூரில் அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் பல இடங்களில் திட்டமிட்டபடி மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தண்ணீர் தேங்கும் இடங்களில் வேறொரு திட்டம் மூலம் மழை நீர் வடிக்கால்வாய் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் முடிவடையும் என கூறினார். மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
சென்னை: பருவமழைக்கு முன்பே நிரம்பும் ஏரிகள்…!

சென்னை, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே, புழல் ஏரி நிரம்பும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை பணிகளில் நீர்வளத்துறையினர் சுணக்கமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இது, 3.30 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. தற்போது, புழல் ஏரியில், 2.99 டி.எம்.சி., அளவிற்கு நீர் இருப்பு உள்ளது.
News September 19, 2025
சென்னை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

சென்னை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!