News August 26, 2024
நாளை 7 துணைமின் நிலையங்களில் மின்தடை

திருச்சி மாவட்டத்தில் அதவத்தூர், வாழாவந்தன் கோட்டை, அம்மாபேட்டை, ஸ்ரீரங்கம், கொப்பம்பட்டி, ரெங்கநாதபுரம், முருங்கப்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (27.8.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 09:45 மணி முதல் மாலை 04:00 வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News October 30, 2025
திருச்சி: கோயிலுக்கு சென்றவருக்கு நேர்ந்த சோகம்

திருச்சி, பச்சைபெருமாள்பட்டியை சேர்ந்த கார்த்திக் (35) என்பவர் நேற்றுமுன்தினம் புளியஞ்சோலை மாசி பெரியண்ணசாமி கோயிலுக்கு சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து அவருடைய உறவினர்கள் தேடிச்சென்ற போது புளியஞ்சோலை அருகே உள்ள ஆற்றில் அவர் சடலமாக கிடந்தார். உடல் துறையூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து புகாரின் பேரில் உப்பிலியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News October 30, 2025
திருச்சி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் வரும் நவ.1ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
எஸ்பி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் எஸ்பி செல்வநாகரத்தினம் தலைமையில், இன்று நடைபெற்றது. இக்கூட்த்தில், மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்களிடமிருந்து மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக பெற்று குறைகளை கேட்டறிந்ததுடன், மனுக்கள் மீது துரிதமாக விசாரணை மேற்கொண்டு உரியநடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவலர்களூக்கு உத்தரவிட்டார்.


