News April 18, 2024
நாளை மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிப்பு

சென்னையில் நாளை காலை முதல் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது . மக்களவை தேர்தலையொட்டி நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய இந்த பயணம் ஏதுவாக இருக்கும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 16, 2025
சென்னையில் வாடகை வீட்டுக்கு போறீங்களா?

சென்னையில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News August 16, 2025
சென்னை இளைஞர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தாண்டு மொத்தம் 3,588 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 23ஆம் தேதிக்குள் ஆண், பெண் இருபாலரும் இந்த <
News August 16, 2025
சென்னையில் மின்தடை அறிவிப்பு

அம்பத்தூர், ஒரகடம், ரெட்ஹில்ஸ், புழல், பாடியநல்லூர், வண்டிமேடு, நாரவாரிக்குப்பம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், பெசன்ட் நகர், அடையாறு, காந்தி நகர், மணலி, 200 அடி சாலை, பர்மா நகர், VOC நகர், பொன்னேரி, MMDA, கூடுவாஞ்சேரி, ஜே.ஜே.நகர், எழில் நகர், ஈஞ்சம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 16) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள்