News November 2, 2025
நாளை முதல் Gpay, phonepe-வில் தாமதம் இருக்காது!

Gpay, phonepe உள்ளிட்ட UPI சேவையில் வெற்றிகரமான & தோல்வி / ரத்தான பரிவர்த்தனைகள் ஆகியவற்றை ஒரே செட்டில்மெண்ட் சுழற்சியில் கையாள்வதை நாளை முதல் (நவ.3) NPCI நிறுத்தியுள்ளது. மாறாக இருவித பரிவர்த்தனைகளும் தனித்தனி சுழற்சிகளில் கையாளப்படும். இதனால், உங்களின் தினசரி UPI பணப் பரிவர்த்தனை வேகமாகும். தோல்வியடைந்த டிரான்சாக்ஷனுக்கு பணம் திரும்ப கிடைப்பதில் இனி தாமதம் ஏற்படாது. SHARE IT
Similar News
News November 3, 2025
டெல்டாவில் தனி கவனம் செலுத்தும் EPS

2021-ல் கொங்குவில் அதிக இடங்களை கைப்பற்றிய அதிமுக, டெல்டா, தென் தமிழகத்தில் கோட்டை விட்டது. தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைந்ததால், 2026-ல் தென்மாவட்டங்களில் கனிசமான வாக்குகளை பெறலாம் என நம்பும் EPS , நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தி, பூத் வாரியாக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்டப் பொறுப்பாளர்களுடன் EPS ஆலோசித்துள்ளார்.
News November 3, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹320 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் ₹11,350-க்கும், சவரன் ₹90,800-க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் ஏற்றம், இறக்கம் கண்டு வந்த தங்கம், இந்த வாரத்தின் முதல் நாளிலேயே மிகப்பெரிய மாற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. <<18183589>>பங்குச்சந்தைகள் தொடர்ந்து<<>> சரிந்து வருவதால் இன்று மாலையிலும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News November 3, 2025
EPS சிறை செல்ல திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆசை: TTV

கோடநாடு வழக்கில் EPS-ஐ கைது செய்ய திண்டுக்கல் சீனிவாசன் விரும்புவதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். கோடநாடு வழக்கில் EPS தான் A1 என செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், உண்மையாகவே குற்றத்தை நிரூப்பித்துவிட்டு EPS-யை கைது செய்யுங்கள் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார். இந்நிலையில், EPS உடன் இருப்பவர்கள் மனவருத்தத்தில் இருப்பதாகவும், EPS-ன் வீழ்ச்சிக்காக காத்திருப்பதாகவும் TTV கூறியுள்ளார்.


