News August 2, 2024
நாளை முதல் 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாளை (ஆகஸ்ட் 3) முதல் 14ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் 13.30 மணி வரை பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும், பல்லாவரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து தி.நகர், பிராட்வேக்கு 20 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
Similar News
News November 2, 2025
செங்கல்பட்டு: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

செங்கல்பட்டு மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.
News November 2, 2025
செங்கல்பட்டு: நடுபழநியை பற்றி உங்களுக்கு தெரியுமா?

செங்கல்பட்டு அச்சிறுபாக்கம் பெருக்கரணையில் மரகத தண்டாயுதபாணி (நடுபழநி) திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இருக்கும் முருகன் சிலை மரகத கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் இருக்கும் முருகர் பழநி தண்டாயுதபாணியை போலவே இருப்பதால் ‘நடுபழநி’ என இக்கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் வங்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 2, 2025
பரனூர் டோல்கெட்டில் விபத்து!

செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் சுங்கச்சாவடி அருகே இன்று காலை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த 2 கார்கள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


