News February 25, 2026

நாளை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்

image

தூத்துக்குடி மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யும் கூட்டம் நாளை (பிப்.26) காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைத்து மேயர் ஜெகன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் 2026 – 27 ஆம் ஆண்டுக்கான உத்தேச பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும், குடிநீர் கல்வி போன்றவைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளுக்கு ஒப்புதலும் இந்த கூட்டத்தில் பெறப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Similar News

News February 25, 2026

நல்லகண்ணுவிற்கு தூத்துக்குடி எம்.பி, அமைச்சர் இரங்கல்

image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று பிற்பகல் 1.55 மணியளவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News February 25, 2026

நல்லகண்ணு மீசையை துறந்தது ஏன் தெரியுமா?

image

ஸ்ரீவைகுண்டத்தை சொந்த ஊராக கொண்ட நல்லகண்ணு பொதுவுடைமை கட்சியால் ஈர்க்கப்பட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். 1949-ம் ஆண்டு இவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது போலீசார் இவரது மீசையை பொசுக்கியும் முடிகளை சிதைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதிலிருந்து நல்லகண்ணு தனது மீசையை துறந்து மீசை வைப்பதை விட்டு விட்டார் என்கின்றனர் அவரை அறிந்தவர்கள்.

News February 25, 2026

JUST IN சோகத்தில் மூழ்கிய ஸ்ரீவைகுண்டம் பகுதி

image

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் 1925-ம் ஆண்டு ராமசாமி-கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாக பிறந்தவர் நல்லகண்ணு. ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலை பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த இவர் தமிழக அரசின் தலைசால் தமிழர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.தற்போது இவரது மறைவால் ஸ்ரீவைகுண்டம் பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

error: Content is protected !!