News March 2, 2026
நாளை பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், நாளை (மார்ச்.3) காலை 11:00 மணியளவில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 2, 2026
கோவை: ரூ.15 லட்சம் வரை கடன் வேனுமா?

கோவை மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
News March 2, 2026
காரமடை அரங்கநாத சாமி கோயில் பற்றி சிறப்பு

காரமடை அருகே பசு தனியாக சென்று வருவதை கால்நடைகளை மேய்க்க கொண்டு சென்ற ஒருவர் கண்டார். அவர் பசுவை பின் தொடர்ந்து சென்ற போது காரைப்புதரில் பால் சொரிவதைப் பார்த்த அவர் கோபத்தில் புதரை வெட்ட இரத்தம் சொட்டியது. பின் சந்தன காப்பிட்டு பார்த்தபோது பெருமாள் சுயம்புவடிவில் காணப்பட்டதாக கூறுப்படுகிறது. அன்று முதல் பெருமாளுக்கு கோயில் எழுப்பி வழிபாடு நடத்தப்படுகிறது. இன்றும் வெட்டுக்காயம் காணப்படுகிறது.
News March 2, 2026
FLASH: கோயம்புத்தூருக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை உப்பிலிபாளையம் மற்றும் சித்ரா பகுதியில் உள்ள பழைய, புதிய பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு இன்று மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் (ம) காவல்துறையினர் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மிரட்டல் விடுத்த நபரைத் தேடி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.


