News January 23, 2026

நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருச்சியில் டிச.30-ல் அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நாளை(சனிக்கிழமை) வேலை நாளாகும். ஆனால், அரசு அலுவலகங்கள் மட்டுமே இயங்கும் என்றும் பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் கலெக்டர் அறிவித்துள்ளார். ஏனென்றால், அரையாண்டு விடுமுறை சமயத்தில் தான் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனால், நாளை பள்ளிகள் இயங்காது என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. SHARE IT.

Similar News

News February 8, 2026

திமுகவுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு

image

தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் நட்சத்திரங்களை களமிறக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில், சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் திமுகவுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பேசினார். அப்போது, 2026-ல் திமுக 200 தொகுதிகளில் வெற்றிபெறுவது நிச்சயம்; அதற்குமேல் வெல்வது லட்சியம் என்றும் ஸ்டாலின் ஆட்சி மீண்டும் அமையும் எனவும் தெரிவித்தார்.

News February 8, 2026

பிப்ரவரி 8: வரலாற்றில் இன்று

image

1936 – ஜவஹர்லால் நேரு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
1971-ல் உலகின் முதல் மின்னணு பங்குச் சந்தையான NASDAQ தொடங்கப்பட்டது
தேசிய சிறுவர் சாரணர் தினம் – பிப்ரவரி 8
1897 – இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவரான ஜாகிர் உசேன் பிறந்த நாள்.
1963- இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல்வாதி முகமது அசாருதின்
1964 – இயக்குநர் சந்தோஷ் சிவன் பிறந்த தினம்

News February 8, 2026

ஏழை எளிய மக்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு

image

தமிழகத்தில் ஆட்சேபனையற்ற அரசுப் புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக வசித்து வரும் ஏழை எளிய மக்கள், தங்கள் நிலத்தை வரன்முறைப்படுத்தி பட்டா பெற்றுக்கொள்ள அரசு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. சென்னை போன்ற மாநகரங்களை ஒட்டியுள்ள ‘பெல்ட் ஏரியா’ எனப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களின் நில ஆவணங்களுடன் உரிய வருவாய்த் துறை அலுவலகங்களை அணுகி, பிப்.28-க்குள் விண்ணப்பித்து, நில உரிமையை பெற்றுக்கொள்ளலாம்.

error: Content is protected !!