News November 7, 2025

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு

image

<<18228875>>சென்னையை<<>> தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை விடுமுறையை ஈடுசெய்ய நாளை பள்ளிகள் இயங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், நாளை(நவ.8) பள்ளிகள் செயல்படாது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிப்பு வெளியாகலாம்.

Similar News

News November 8, 2025

ஒரே விக்கெட்.. சாதனை படைக்க போகும் பும்ரா

image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டி20-ல் பும்ரா மகத்தான சாதனை படைக்கவுள்ளார். டி20-ல் இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும், 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். பும்ரா டெஸ்டில் 226 விக்கெட்டுகளும், ODI-ல் 149 விக்கெட்டுகளும், டி-20-ல் 99 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். மேலும், டி20-ல் 100 விக்கெட்டுகள் எடுத்த 2-வது இந்தியராக உருவெடுப்பார்.

News November 8, 2025

’24’ சூர்யாவை காப்பியடித்தாரா ராஜமெளலி?

image

24 படத்தின் சூர்யா (ஆத்ரேயா) கதாபாத்திரத்தை ராஜமெளலி காப்பியடித்துள்ளதாக SM-ல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘Globetrotter’-ல் பிருத்விராஜின் கும்பா என்ற கதாபாத்திர போஸ்டர் வெளியானது. இதை பார்த்ததும் அதே வீல் சேர், முடக்குவாதமான வில்லன் என 24 ஆத்ரேயா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு நினைவு வந்தது. ஆனால், அது அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் பிரதிபலிப்பு என்று டோலிவுட் வட்டாரம் சப்பை கட்டு கட்டுகிறது.

News November 8, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல்
▶குறள் எண்: 513
▶குறள்:
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு.
▶பொருள்: நிர்வாகத்தின் மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.

error: Content is protected !!